சாலையில் படுக்கும் கால்நடைகள்

Update: 2023-03-01 12:06 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கூத்தப்பர் சாலையில் ஏராளமான கால்நடைகள் சாலையில் நடுமாடுவதும், படுத்துக்கொள்வதுமாக உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் கால்நடைகள் படுத்திருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி அதன் மீது வாகனத்தை விட்டு கீழே விழுந்து வருகின்றனர். மேலும் பெரும் அளவில் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்