போக்குவரத்து நெரிசல்

Update: 2022-12-04 11:55 GMT

திருச்சி மாவட்டம், முசிறி நகரத்தில் துறையூர் சாலையில் ஏராளமான மரக்கடைகளும், மொத்த வியாபார கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு சரக்குகளை இறக்க வரும் லாரிகள் பள்ளி நேரமான காலை 7 மணி முதல் 10 மணி வரை துறையூர் சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்களை வரிசையாக நிறுத்திக்கொண்டு சரக்குகளை இறக்குவதால் பள்ளி செல்லும் வாகனங்கள், ஆட்டோ, பஸ் போன்றவைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. தினமும் இதனால் வேலைக்கு செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரக்குகளை இறக்கும் நேரத்தை மாலை அல்லது இரவு நேரங்களுக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்