கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-16 12:57 GMT
சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு மார்க்கமாக, அதாவது கங்கனான்குளம், பத்மநேரி, களக்காடு, வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல மாலை நேரத்தில் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. மேலும் ஒருசில பஸ்கள் சரியான நேரத்துக்கும் வருவது இல்லை. இதனால் அந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கூடுதல் பஸ்கள் இயக்கவும், சரியான நேரத்துக்கு பஸ்கள் வந்து செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி