சேதமடைந்த சிமெண்டு கற்கள்

Update: 2022-09-14 12:16 GMT

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில்வே தண்டவாளம் சந்தையடி வழியாக செல்கிறது. சந்தையடி ஊருக்கு வரும் சாலை தண்டவாளத்தின் குறுக்கே செல்கிறது. இந்த பகுதிகளில் தண்டவாளத்தின் இரு பக்கமும் பதிக்கப்பட்டுள்ள சிமெண்டு கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்கும் போது பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு கற்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.ராமதாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்