தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள்

Update: 2022-08-28 13:38 GMT
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பவித்திரத்தில் இருந்து முசிறி வரை செல்வதற்கு காலை நேரத்தில் ஒரே ஒரு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்ஸில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிக அளவில் செல்வதினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்வதினால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்