வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2022-08-25 15:18 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பூங்கா ரோடு அம்மா உணவகம் அருகில் நகராட்சி நுழைவுவாயில் பகுதியில் சாலை திரும்பும் இடத்தில் வேகத்தடை உள்ளது. இதில் வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். வேகத்தடை அருகில் வரும்போது அது இருப்பதை தெரிந்து திடீர் பிரேக் போடுவதால் நிலைதடுமாறி விழுகிறார்கள். எனவே வேகத்தடையில் வர்ணம் பூச கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி