கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-06-02 12:39 GMT

தெள்ளார் தெற்கு மாட வீதியில் சில மாதங்களுக்கு முன்பு கால்வாய் சீரமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கால்வாயில் கழிவுநீர் செல்ல உரிய வழிவகை செய்யப்படவில்லை. கால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தெள்ளார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சக்தி, தெள்ளார்.

மேலும் செய்திகள்