பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குழிக்கடவு பகுதி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ெதாற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.