கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலையோரத்தில் உள்ள கால்வாயை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் கால்வாயின் பல பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.