நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2026-01-25 10:12 GMT

திருச்சி மாவட்டம் காட்டூரில் உள்ள அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்லும் வகையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து அருகில் உள்ள காலி மனையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்