திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதியான கல்லாத்துகோம்பையில், மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து வரும் மழைநீர் சாலைகளில் தேங்குவதை தவிர்ப்பதற்காகவும், மலைவாழ் மக்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்றவும் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் வடிகால் அமைப்பு குறுகலாகவும், வளைந்து நெளிந்தும் செல்வதால் வடிகாலில் நீர் தேங்கவும், பராமரிப்பதில் குறைபாடுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் அமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.