தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2025-06-22 15:47 GMT
புவனகிரியில் 8-வது வார்டில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. தற்போது அந்த வாய்க்கால் தூர்ந்து போய் கழிவுநீரானது தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தூர்ந்து போன வாய்க்காலை தூர்வாாி தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்