அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகர், நாச்சியம்மன் கோவில் தெரு, ஜுப்ளி ரோடு ஆகிய பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்துபோன நிலையிலும், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.