தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2025-06-01 14:13 GMT

தஞ்சை மாவட்டம் நரசநாயகபுரம் ஊராட்சியில் பஞ்சாரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலையோரத்தில் சிறிய அளவிலான கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகால் முறையான பராமரிப்பின்றி திறந்த நிலையில் இருந்து வருகிறது. இதன்காரணமாக குப்பைகள் குவிந்து வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்