பட்டுக்கோட்டை டவுன் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலின் ஒரு பகுதி திறந்த நிலையில் இருக்கிறது. அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், துர்நாற்றம் காரணமாக பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.