கடும் துர்நாற்றம்

Update: 2024-06-09 15:15 GMT

ஊட்டி நகரில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆள் இறங்கும் குழிகளில் இருந்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது, நடந்து செல்லும் மக்கள் மீது கழிவுநீர் தெளிக்கிறது. அதோடு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்