தூர்ந்து போன கழிவுநீர் கால்வாய்

Update: 2024-01-21 15:34 GMT
திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி வாய்க்காலில் இருந்து வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்