சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2023-10-22 13:23 GMT

சென்னை கொளத்தூர், பாலாஜி நகர் சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதம் அடைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த பகுதியில் செல்லம் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாத அவல நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய்யை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்