கால்வாயை தூர்வாருவது அவசியம்

Update: 2023-09-27 17:56 GMT
மங்கலம்பேட்டை பேரூராட்சி 2-வது வார்டில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்