சுகாதார சீர்கேடு

Update: 2022-08-07 13:12 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையோரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், வெளியேறிச்செல்லும் சாக்கடை கழிவுநீரால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்