கழிவுநீர் அடைப்பு; துர்நாற்றத்தால் அவதி

Update: 2022-06-03 13:36 GMT
சென்னை வில்லிவாக்கம் அம்மன் குட்டை தெருவில் உள்ள வீடுகளில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வீடுகளிலேயே தேங்குகிற நிலை ஏற்படுகிறது. இந்தநிலை கடந்த 10 நாட்களாக நீடிக்கிறது. துர்நாற்றமும் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் கவனித்து அடைப்பை சரி செய்து தரவும், கழிவுநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வும் காண வேண்டும்.

மேலும் செய்திகள்