தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-09-10 12:02 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பின்பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்