கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-09-06 14:58 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் சில இடங்களில் மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுவதினால் சில இடங்களில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால்களை மூடுவதுடன், இப்பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்