திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்

Update: 2023-09-03 18:13 GMT
வடலூர் கொளக்குடி கிராமம் பெரிய தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. மேலும் கால்வாய் கட்டுமான பணிகள் முழுமை அடையாமலும் காணப்படுகிறது. இதனால் சிறுவர்கள், வயதானவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் பணிகளை முழுமையாக முடித்து, அதை சிமெண்டு சிலாப் அமைத்து மூட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்