சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-08-09 12:38 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் 5 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் அதே பகுதியில் தனியார் ஓட்டல்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. இந்நிலையில் சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக சாக்கடையில் கழிவுநீர் செல்லாமல் அனைத்து கழிவுநீர்களும் சாலையின் நடுவே செல்வதால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்தியவாறு செல்கின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்