கிடப்பில் கால்வாய் அமைக்கும் பணி

Update: 2023-07-19 17:45 GMT
திட்டக்குடி தாலுகா பட்டூர் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்