புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-07-19 13:38 GMT

அாியலூர் மாவட்டம், தா.பழூர் பஸ் நிறுத்தும் அருகே தோப்பேரி செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்