துர்நாற்றத்தால் அவதி

Update: 2023-06-21 15:26 GMT

கொடுமுடி புதிய பஸ் நிலையம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். உடனே கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்