தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-18 10:38 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழந்தூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மூக்கை மூடியபடி பள்ளிக்கு சென்று வருகின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு முறையான தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்