குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-05-21 17:23 GMT
வடலூர் நகராட்சி 19-வது வார்டில் வடக்கு குறுக்கு ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்