சுகாதார சீர்கேடு

Update: 2023-05-21 12:23 GMT

மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் இருந்து துலா கட்டம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை குழி ஒன்று உள்ளது. இந்த குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி செல்கிறது. இந்த நீர் வழிந்தோடி காவிரி ஆற்றுக்குள் கலக்கிறது. வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்