நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-03-01 12:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருணாச்சல காவிரி வடிகால் வாய்க்காலில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தண்ணீர் செல்லாமல் கழிவுநீர் கலந்து சாக்கடையாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதி பொதுமக்கள் அருணாச்சல காவிரி வடிகால் வாய்க்காலில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்