கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-12-11 12:22 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, திருப்பெருந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட மீமீசல் ரோடு, மாணிக்க வாசகர் நகர், அம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் அதிக அளவு மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்குகிறது. இதனால் இப்பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கொசுத்தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கொசுக்கடியால் மர்ம காய்ச்சல் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிப்பதுடன், இரவு நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்