ஊட்டி கல்லட்டி கிராமத்தில் அனைத்து இடங்களிலும் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சுகாதார நலனை கருத்தில் கொண்டு கல்லட்டியில் அனைத்து இடங்களிலும் வடிகால் அமைத்து தர வேண்டும்.