தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-09 18:12 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்