டவுன் பஸ்களை இயக்க வேண்டும்

Update: 2022-08-20 10:51 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் தனித்தனி தாலுகாவாக உதயமாகி பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், 2 தாலுகாகளை இணைக்கும் விதமாக முறையான போக்குவரத்து வசதி இல்லை. அவுலூர்பேட்டை ஊரில் இறங்கி, அங்கிருந்து மாற்றுப் பஸ் ஏறி செல்ல வேண்டி உள்ளது. சேத்துப்பட்டு-கீழ்பென்னாத்தூர் இடையே 2 டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.முத்துமாணிக்கம் கீழ்பென்னாத்தூர்

மேலும் செய்திகள்