கெங்கவல்லி வட்டம், கூடமலை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் வரையாமலும், எச்சரிக்கை பலகை வைக்காமலும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில், வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் வரைவதுடன், எச்சரிக்கை பலகைகளையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.