விருதுநகர் ஒன்றியம் முத்துராமலிங்கநகரில் பல இடங்களில் சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். விபத்துகளும் நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?