விபத்து அபாயம்

Update: 2022-08-13 10:13 GMT
விபத்து அபாயம்
  • whatsapp icon

நாகர்கோவில் வடசேரியில் இருந்து புத்தேரிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் சாஸ்தா நகர் பகுதியில் ஓரத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் கடந்த மாதம் அரசு பஸ் கவிழ்ந்து பயணிகள் காயமடைந்தனர். அதைதொடர்ந்து அந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அதன்பிறகு அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட தடுப்பு சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்