ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளத்தில் இருந்து குறிப்பன்குளம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையால் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.