ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் சுவாத்தான் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த சாலையே இப்பகுதி மக்களின் முக்கிய பிரதான சாலையாகும். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.