ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆண்டாயூரணியில் இருந்து அறிவித்தி கிராமம் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகிறது. விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?