ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து பொதுவக்குடி செல்லும் சாலை பயன்படுத்த முடியாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிப்பதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.