அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வழியாக தினமும் எண்ணற்ற சிமெண்டு லாரிகள், சுண்ணாம்பு கல் லாரிகள், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு ஜல்லிகற்கள் மற்றும் சிமெண்டு கலவைகள் ஆகியவைகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. இதனால் வாலாஜா நகரத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை உள்ள இடைபட்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே இதனை தடுக்க சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.