விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் எழுவணி ஊராட்சியை சேர்ந்த முக்குளம் முதல் நதிக்கிராமம் வரை உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சேதமடைந்த சாலையால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.