வர்ணம் பூசப்படுமா?

Update: 2023-05-14 17:24 GMT

கோபி அக்ரகாரத்தில் உள்ள காட்டு கருப்புராயன் கோவிலை ஒட்டி திருமலை நகருக்கு மண் ரோடு செல்கிறது. இதனை தற்போது தார்சாலையாக மாற்றி வேகத்தடை போட்டு உள்ளனர். ஆனால் வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்