ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரோடு பாலம் பகுதியில் உள்ள சாலையின் தடுப்புசுவர் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. தடுப்புச்சுவரின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கற்கள் வெளியே தெரிகிறது. வாகனஓட்டிகள் ஒருவித அச்ச உணர்வுடனே சாலையில் பயணிக்கின்றனர். எனவே விபத்து அபாயம் உள்ளதால் தடுப்பு சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.