அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கழுமங்கலம்-நாகன்குடி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.