விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகில் செல்லும் மேம்பாலத்தில் ஒளிரும் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. மேலும் பாலத்தின் இரண்டு முனைகளிலும் வேகத்தடைகளை உயர்த்தி அமைத்து விபத்துகள் நடப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.