மதுரை மாநகராட்சி 31-வார்டு கோமதிபுரம், அன்பு நகர், வள்ளலார் தெரு ஆகிய பகுதி சாலைகள் சேதமடைந்து இருப்பதால் மழையால் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிஅடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.